மயிலை சின்னத்தம்பிப்பிள்ளை ராஜா எனப்படும் எம். சி. ராஜா (1883 - 1943) தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பட்டியல் இன (Depressed Caste) அரசியல்வாதி மற்றும் சமூகச் செயற்பாட்டாளர். பி. ஆர். அம்பேத்கருக்கு இணையாக பார்க்கப்பட்ட தமிழக அரசியல்வாதி. 1931 ஆம் ஆண்டு, லண்டனில் நடைபெற்ற இரண்டாம் வட்ட மேசை மாநாட்டில் தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதியாகப் பங்கேற்றவர். குழந்தைகள் மத்தியில் இன்றைக்கும் பிரபலமாக இருக்கும் "சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு", "கைவீசம்மா கைவீசு" "காக்கா, காக்கா - கண்ணுக்கு மை கொண்டுவா" போன்ற மழலையர் பாடல்களை எழுதியவர்.
எம். சி. ராஜா குறித்த தமிழ்த் தடம் நிகழ்ச்சியை வழங்குகிறார், முனைவர் தாமு.