தமிழ்த் தடம்: பெரியார்

Source: SBS
நவீன தமிழரின் வரலாற்றை பெ.மு, பெ.பி என்று பிரிக்கலாம். பெரியாருக்கு முன். பெரியாருக்குப்பின். அப்படி தமிழரின் வாழ்வைப் தலைகீழாக புரட்டிபோட்டவர் பெரியார். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பெரியார் என்ற மனிதர் பிறக்காமல் இருந்திருந்தால் கோடிக்கணக்கான தமிழர்களின் வாழ்வில் வெளிச்சம் பிறக்காமலேயே போயிருந்திருக்கும். தந்தை பெரியார் - வஞ்சிக்கப்பட்ட மக்களின் குரல். ஆயிரமாண்டு நிலவிய ஆதிக்க மலையை அடித்து நொறுக்கி கிழவன். 94 வயதிலும் மூத்திரச் சட்டியைத் தூக்கிக்கொண்டு சளைக்காமல் போராடிய ஒரு சரித்திரம். அவர் குறித்த தமிழ்த் தடம் நிகழ்ச்சியை முன்வைக்கிறார் செல்வி அவர்கள்.
Share



