தமிழ்த் தடம்: எஸ்.கே. பரராஜசிங்கம்

Source: SBS
’ஈழத்தின் மெல்லிசைப்பாடல்கள்’ என்ற கலைவடிவம் உருக்கொண்டு உயிர் பெற்றுப் பரவ பெரிதும் காரணமாக இருந்தவர்களில் குறிப்பிடத் தகுந்தவர் எஸ்.கே. பரராஜசிங்கம் அவர்கள். ஆக்க சங்கீதம் பற்றிய பிரக்ஞையை விதைத்தவராகவும்; தன் உயிரைப் பிளியும் குரலால் ஈழத்தின் மெல்லிசைக்கு உயிர் கொடுத்தவராகவும் இவரின் ஈழத்துப் பாடல்கள் அமைந்திருந்தன. ஈழத்தின் இசைப்பாரம்பரியங்களையும் வழக்குகளையும் நன்கறிந்து கர்நாடக இசைஞானத்தோடும் ஏனைய நாட்டு இசைப்புலமையோடும் இருந்த பரா, எங்கு இசை அழகுகளைக் கண்ட போதும் அதனை ஈழத்தமிழுக்குக் கொண்டு வர விளைந்தவர். பரிசோதனை முயற்சிகள் பல செய்து ஈழத்து மெல்லிசையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியவர். அவர் குறித்த தமிழ்த்தடம் நிகழ்ச்சியை முன்வைக்கிறார் யசோதா பத்மநாதன் அவர்கள்.
Share



