தமிழ்த் தடம்: சி.பா .ஆதித்தனார் (1905 – 1981)

Source: Si.Pa
தெற்காசிய இதழியல் துறை வரலாற்றில் ஒரு முன்னோடி மட்டுமல்ல, தமிழ் தேசிய வரலாற்றிலும் ஒரு தவிர்க்க முடியாத தலைவர்தான், சி.பா.ஆதித்தனார் என்று பரவலாக அழைக்கப்படும், சி.பாலசுப்பிரமணிய ஆதித்தன் அவர்கள். அவர், 'உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு' என்னும் முழக்கத்தின் மூலம் தமிழர்களை தட்டியெழுப்பியவர். “சேதுக் கால்வாய்” திட்டத்தை, “தமிழன் கால்வாய்” என்று அழைத்தவர். தமிழருக்கு தனிநாடு தேவை என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்திய வரைபடத்தை (தமிழகத்தை உள்ளடக்காத) எரித்து சிறை சென்றவர்.
Share