தமிழ்த் தடம்: தியாகராயர்
Selvi Source: Selvi
வெள்ளுடை வேந்தர் சர் பி. தியாகராய செட்டி என்னும் பிட்டி தியாகராயர் நீதிக்கட்சியின் நிறுவனர்களுள் ஒருவராவார். திராவிட இயக்கத்தில் மூத்த தலைவர்களில் ஒருவராகப் போற்றப்படுபவர். இருபதாம் நூற்றாண்டின் முதல் காற்பகுதியில் சென்னை மாகாணத்தின் முக்கிய அரசியல் தலைவராக விளங்கிய இவர் தொழிலதிபராகவும் பெயர்பெற்றிருந்தார். 1916 இல் பிராமணரல்லாத சாதியனரின் நலனுக்காக குரல் கொடுக்க டாக்டர் டி. எம். நாயருடன் சேர்ந்து நீதிக்கட்சியைத் தொடங்கினார். இவரது நினைவாக சென்னை நகரில் புதிதாக உருவாக்கப்பட்ட நகருக்கு தியாகராய நகர் என்று பெயர் சூட்டப்பட்டது. அவர் குறித்த தகவலை தமிழ்த் தடம் நிகழ்ச்சி மூலம் முன்வைக்கிறார் செல்வி அவர்கள்.
Share


