இலங்கையின் இரத்தினபுரி மாவட்டத்தில் பலாங்கொடை எனும் இடத்தில் அமைந்துள்ள சபரகமுவ பல்கலைக்கழகத்தில் (Sabaragamuwa University of Sri Lanka) கணினி தொழில்நுட்பத் துறைக்கென்று தனியான பீடம் ஒன்றை நிறுவிய பெருமை கொண்ட பேராசிரியர் ஷண்முகநாதன் வசந்தப்பிரியன் அவர்கள் ஆஸ்திரேலியா வந்திருந்த வேளை, அவரை SBS ஒலிபரப்புக் கூடத்தில் சந்தித்து ஒரு நீண்ட நேர்காணலை நடத்தியுள்ளார் குலசேகரம் சஞ்சயன்.
இந்த நேர்காணலில், அவரது பின்னணி என்ன?, சீனாவின் வூகான் மாகாணத்தில் முனைவர் பட்டத்தைப் பெற்ற அநுபவம் எப்படி?, போருக்குப் பிந்தைய சூழ்நிலையில், தமிழ்ப் பிரதேசங்களில் தற்போதைய கல்வி நிலைமைகள் என்ன?, பெருவாரியாக சிங்கள மக்களுடன் இயங்கும் பல்கலைக் கழகத்தில் பெரிய பொறுப்பில் இருக்கும் அவர் இனப்பாகுபாட்டை அனுபவித்தாரா?, அவரது எதிர்காலத்திட்டங்கள் என்ன? என்பது போன்ற பல விடயங்களுக்கு மனம் திறந்து பதிலளிக்கிறார் பேராசிரியர் ஷண்முகநாதன் வசந்தப்பிரியன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asianஎனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.




