ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் கடந்த வாரம் இணையவழி சந்தித்து 188 மில்லியன் டாலர் மதிப்புகொண்ட பல ஒப்பந்தங்களை செய்துகொண்டுள்ளனர். பாதுகாப்பு, விண்வெளி, வர்த்தகம் என்று பல துறைகளில் இரு நாடுகளும் நெருக்கமான உறவை மேற்கொள்ள என்ன காரணம்? இந்த உறவின் தாக்கம் எப்படி இருக்கும் என்று அலசுகின்றனர் இந்தியாவின் புதுடெல்லியில் சுயேச்சையாக இயங்கும் மூத்த பத்திரிகையாளர் R.ராஜகோபாலன் மற்றும் NSW மாநிலத்தில் அரசு விருது பெற்ற பத்திரிகையாளர் மற்றும் ஆஸ்திரேலிய இந்திய வர்த்தக அமைப்பின் (Australia India Business Council) Make in India Chapter யின் தேசியத் தலைவர் விஸ் விஸ்வநாதன் அவர்கள். பரிமாற்றம் நிகழ்ச்சியில் இவர்களோடு உரையாடியவர்: றைசெல்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share





