லெஸ்டர் பல்கலைக்கழகத்தித்தின் (The University of Leicester) புதிய துணைவேந்தராக, தமிழர் ஒருவர், பேராசிரியர் நிஷான் கனகராஜா இணைகிறார். பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மற்றும் நிறுவன சார்பு துணைவேந்தராக பணியாற்றி கணிசமான மாற்றங்களை அங்கு அறிமுகம் செய்த இவர், லெஸ்டர் பல்கலைக்கழகத்தித்தின் புதிய துணைவேந்தராகிறார். புதிய பதவியை அவர் நவம்பர் மாதம் ஏற்றுக்கொள்வார். தனது இளமைப் பருவத்தைப் பற்றியும், பிரிஸ்டல் நகரில் அவரது பங்களிப்பு குறித்தும், தனது புதிய பணியில் எதை சாதிக்கலாம் என்று எதிர்பார்க்கிறார் என்பதையும் பற்றி குலசேகரம் சஞ்சயனுடன் பேசுகிறார் பேராசிரியர் நிஷான் கனகராஜா.