பிரிஸ்பேன் நகரில் ஜூன் மாதம் 25 - சனிக்கிழமை SBS தமிழ் ஒலிபரப்பின் நிறைவேற்றுத் தயாரிப்பாளர் றைசெல் குயின்ஸ்லாந்து சமூகத் தலைவர்களோடும், தமிழ் பேசும் புகலிட கோரிக்கையாளர்களோடும் பல சந்திப்புகளை நடத்தினார். அப்படியான ஒரு சந்திப்பில், கிரிஸ் இளங்கோ (ஆஸ்திரேலிய தமிழர் பேரவை), அருட்திரு.சுப்பிரமணியம் மனோபவன், சோதிகா ஞானேஸ்வரன், குயின்ஸ்லாந்து புலம் பெயர் தமிழர் அமைப்பின் தவராசா தயாபரன் மற்றும் சாம்பசிவம் ஸ்ரீகுகன் மற்றும் சுதா சிவசண்முகம் ஆகியோர் புகலிடம் கோருவோர் தொடர்பாக பல கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர். இந்த கருத்துக்களின் தொகுப்பு.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share





