தமிழர்களுக்கு தை மாதம் சிறப்பான மாதம். உலகெங்கிலுமுள்ள தமிழர்கள் கொண்டாடும் மாதம். மூன்று நிகழ்வுகள் – தைப்பொங்கல், திருவள்ளுவர் தினம், மற்றும் தமிழ்ப் புத்தாண்டு இம் மூன்றையும் ஜனவரி 27 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, காலை 9 மணியிலிருந்து நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் பாராமட்டா நகரிலுள்ள பாராமட்டா பூங்காவில், சிட்னி தமிழர்கள் கொண்டாடுகிறார்கள். இது குறித்து, திருமதி சுசீலா முருகேசன் மற்றும் விக்னேஷ் குமார் முனுசாமி தயானந்தம் ஆகியோரிடம் விவரங்களைக் கேட்டறிந்து கொள்கிறார் குலசேகரம் சஞ்சயன்.