இந்தியாவில் முஸ்லீம்களின் விவாகரத்து தொடர்பான முத்தலாக் சட்டம் தற்போது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம் இந்த சட்டம் மிகவிரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது. இந்த சட்டத்தின் மூலம் முஸ்லீம் பெண்களின் உரிமை பாதுகாக்கப்படும் என்று ஆளும் பாரதிய ஜனதா கட்சி கூறுகிறது. இந்த சட்டத்தின் முஸ்லீம் பெண்களுக்கு சாதகமா, பாதகமா என்ற கேள்வியோடு தமிழ் நாட்டில் முஸ்லீம் பெண்கள் தொடர்பாக தொடர்ந்து எழுதிவரும் எழுத்தாளர் எச்.பீர்முஹம்மது அவர்களிடம் பேசினோம். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.
Share




