தமிழர்களின் தனிப்பெரும் பாரம்பரிய விழாவான பொங்கல் திருநாள், பிரிஸ்பேன் நகரில் மிகவும் கோலாகலமாக பொங்கல் நாள் அன்றே கொண்டாடப்பட்டது. தாய் தமிழ் பள்ளியும், Quensland தமிழ் மன்றமும் இணைந்து நடத்திய இவ்விழா ஆஸ்திரேலிய தமிழ் சமூகமே பாராட்டும் வகையிலும், பெருமைகொள்ளும் வகையிலும் இனிதே நிறைவேறியுள்ளது. இது குறித்து இந்நிகழ்வின் ஊடக அனுசரணையாளர் என்ற முறையில் SBS தமிழ் ஒலிபரப்பு மிக்க மகிழ்ச்சி கொள்கிறது. இந்நிகழ்வு குறித்த ஒரு விவரணத்தை முன்வைக்கிறார், குலசேகரம் சஞ்சயன்.