காஷ்மீர் என்பது மூன்று பகுதிகளைக்கொண்டது. அதன் ஒரு பகுதி இந்திய நிர்வாகத்தின் கீழும், இன்னொரு பகுதி பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழும், இன்னொரு பகுதி Aksai Chin என்ற பெயருடன் சீனாவின் நிர்வாகத்தின் கீழும் உள்ளன. கடந்த சுமார் எழுபது ஆண்டுகளாக இந்திய நிர்வாகத்தின் கீழுள்ள ஜம்மு-காஷ்மீர் பகுதிக்கு இந்தியா வழங்கிவந்த உரிமைகள்/சலுகைகள் நீக்கப்படுவதாக இந்திய ஆளும் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான அரசு அறிவித்துள்ளது. காஷ்மீருக்கான என்னென்ன உரிமைகள்/சலுகைகள் நீக்கப்பட்டுள்ளன? இது நல்லதுதானா? என்றுவிளக்குகிறார் தமிழ்நாட்டின் பிரபல சுயாதீனமான அரசியல் விமர்சகர் பானு கோமஸ் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.
Share




