தமிழ் நாட்டில் ஜல்லிக்கட்டு விளையாட்டு மீதான தடை தொடர்கிறது. இந்த தடையை நீக்கக் கோரி தமிழகமெங்கும் நடந்துவரும் ஆர்பாட்டங்களுக்கு ஆதரவாக எதிர்வரும் வெள்ளிகிழமை சிட்னி மற்றும் மெல்பன் நகரங்களில் தமிழர் ஒன்றுகூடல் நிகழ்வுகளை தமிழ் இளைஞர்கள் நடத்தவுள்ளனர். ஜல்லிக்கட்டு தடையை எதிர்த்து ஆஸ்திரேலியாவில் ஏன் இந்த நிகழ்வை நடத்துகின்றீர்கள் என்று விளக்குகிறார் நிகழ்வின் ஏற்பாட்டாளர்களின் சார்பில் மதன் ராஜ் அவர்கள். அவரோடு உரையாடியவர் றைசெல்.
Share



