அவரது முதல் குழந்தை பிறந்தபோது, அற்புதமான, வண்ணமயமான மற்றும் கவர்ச்சிகரமான குழந்தைகளின் புத்தகங்களை வாங்கிய வனிதா வீரசாமி, அவை ஒன்றும் தமிழில் இல்லையே என்று உணர்ந்தார். தமிழில் அவர் வாங்கிய குழந்தை நூல்கள் தரத்தில் குறைவாக இருந்தன. என்ன செய்தார்? தானே குழந்தை நூல்களை உருவாக்கி, வாரணம் சிறுவர் நூல் பதிப்பகம் என்பதை நிறுவி அதனூடாக பிரசுரித்துள்ளார். வனிதா வீராசாமி தனது அனுபவத்தை குலசேகரம் சஞ்சயனுடன் பகிர்ந்து கொள்கிறார்.