மகாகவி பாரதியார் என்றழைக்கப்படும் சுப்பிரமணிய பாரதி எட்டயபுரத்தில் 1882-ம் ஆண்டு டிசம்பர்த் திங்கள் 11-ம் நாள் பிறந்தார். சிறந்த எழுத்தாளராகவும் தத்துவவாதியாகவும் இருந்த அவர் இந்திய விடுதலைப் போராட்டத்திலும் ஈடுபட்டார். அதே எட்டயபுரத்தில் பிறந்த எழுத்தாளர் இளசை மணியன் அவர்கள் மகாகவி பாரதி குறித்து தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகிறார். அவரை தொலைபேசி வழியாகத் தொடர்புகொண்டு உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.