பூர்வீகக்குடி மற்றும் Torres Strait தீவு மக்களின் விவகாரங்களை பாதிக்கும் அரச கொள்கைகள் மற்றும் சட்டங்கள் குறித்து அரசுக்கு ஆலோசனை வழங்கும் Indigenous Voice to Parliament என்ற கட்டமைப்பு குறித்த மக்கள் கருத்து வாக்கெடுப்பு அக்டோபர் 14ஆம் தேதி நடைபெற இருக்கிறது. அதற்கு முன்னதாக, இது குறித்து SBS தமிழ் ஒலிபரப்பின் நேயர்களுக்கு நாம் எடுத்து வரும் நிகழ்ச்சித் தொடரின் 7வது நிகழ்ச்சியில், Voice கருத்து வாக்கெடுப்பு முடிவு வெளிவந்த பிறகு என்ன நடக்கும் என்பதை விளக்குகிறார் றேனுகா துரைசிங்கம்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share





