SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
என்ன செய்தால் ஒருவர் தடுப்பூசிபோட்டுக்கொள்ள முன்வருவார்?

Source: SBS Tamil
நாட்டில் 70 சதா மக்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டால் முடக்க நிலை - lockdown இனி இல்லை என்ற நிலைத்தோன்றும் என்றும் எனவே அதிகமான மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வரவேண்டும் என்றும் அரசு கூறுகிறது. ஆனால் இன்னும் மக்களில் பலர் தடுப்பூசி போட்டுக்கொள்ள தயங்குகின்றனர். என்ன செய்தால் இவர்கள் தடுப்பூசிபோட்டுக்கொள்ள முன்வருவர் என்ற கேள்விக்கு விடைதேடுகிறது இந்த பரிமாற்றம் நிகழ்ச்சி. இதில் கலந்துகொண்டவர்கள் பெர்த் நகரிலிருந்து ஜனனி (மேல் இடது), பிரிஸ்பேன் நகரிலிருந்து கிஷோர் குமார் (மேல் வலது), மெல்பன் நகரிலிருந்து சரண்யா பாலகிருஷ்ணன் (கீழ் வலது), சிட்னி நகரிலிருந்து தாமோதரன் இராஜலிங்கம் (கீழ் இடது) ஆகியோர். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.
Share



