நௌரு மற்றும் மானுஸ் தீவின் தடுப்புமுகாங்களிலுள்ள புகலிடக் கோரிக்கையாளர் எதிர்காலம் என்ன என்பது மீண்டும் கேள்விக்குறியாகியுள்ளது.புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சொல்வதற்கும், அமெரிக்க அதிகாரிகள் சொல்வதற்குமிடையில் மிகப் பெரிய இடைவெளி இருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.ஆஸ்திரேலியாவுடன் ஏற்படுத்தப்பட்ட அகதிகள் ஒப்பந்தம் முட்டாள்தனமானது என்று டொனால்ட் ட்ரம்ப் கூறுகிறார். அவருக்கும் பிரதமர் Malcolm Turnbullற்கும் இடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடல் முடிவடைவதற்கு முன்னரே டொனால்ட் ட்ரம்ப்பினால் இடைநிறுத்தப்பட்டது என்று செய்திகள் கசிந்துள்ளன. இது குறித்து Peggy Giakoumelos, Greg Dyett மற்றும் Myles Morgan எழுதிய விவரணத்துடன், அமெரிக்க-ஆஸ்திரேலியா உறவு குறித்து Santilla Chingaipe இணைத்து ஒரு விவரணத்தை முன்வைக்கிறார், குலசேகரம் சஞ்சயன்.