மியான்மார் நாட்டின் அதிபர் மற்றும் அண்மையில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற National League for Democracy கட்சியின் தலைவர் ஆங் சாங் சூகி உட்பட அந்தக் கட்சியின் மூத்த உறுப்பினர்களை அந் நாட்டுப் படையினர் வீட்டுக் காவலில் வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அனைத்து அதிகாரங்களையும் இராணுவம் கைப்பற்றியுள்ளதுடன் ஒரு வருடத்திற்கு அவசரகால நிலை என்று பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
மியன்மாரின் தற்போதைய சூழ்நிலை என்ன என்று, மியன்மாரில் வாழும் சுமார் ஒரு மில்லியன் மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தமிழ் மொழி வளர்ச்சிக்காகவும் உழைத்து வரும் வள்ளுவன் அவர்களிடம் கேட்டறிந்து கொள்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
Share




