சுற்றுச்சுழல் பாதுகாப்பு இயக்கத்தின் செயற்பாட்டாளர் முகிலனை காணவில்லை என்கிற செய்தி ஒரு பேசு பொருளாக கடந்த பத்து நாட்களாகப் பேசப்பட்டு வருகிறது. சமூக வலைதளங்களில் பலரும் இது குறித்து தமது கரிசனையை வெளியிட்டு வருகிறார்கள். உண்மையைக் கண்டறியும் நோக்குடன் செயற்படும் அறப்போர் இயக்கத்தின் M S சந்திர மோகன் வழங்கிய கருத்துகள் மற்றும் தமிழ் நாடு காவல்துறை சார்ந்தவர்களுடனான தொடர்பு முயற்சிகள் என்பவற்றுடன் ஒரு விவரணத்தைப் படைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.