பாதுகாப்பான மற்றும் பயனுள்ள COVID-19 தடுப்பூசிகள் விரைவில் மக்களுக்கு வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இதில் எந்த தடுப்பூசி எமக்குக் கிடைக்கும் என்று நாம் சிந்தித்திருக்கும் வேளையில், Pfizer நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசி குறித்து சிட்னி நகரில் குடும்ப மருத்துவராகக் கடமையாற்றும் வைத்தியர் பாலசிங்கம் மோகனதாஸ், AstraZeneca நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசி குறித்து சிட்னி புறநகரில் குடும்ப மருத்துவராகக் கடமையாற்றும் வைத்தியர் சாந்தினி இளங்கோ, மற்றும் Moderna நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசி குறித்து அமெரிக்காவின் New York மாநிலத்தில் Internal Medicine Specialist ஆகக் கடமையாற்றும் Francis Constantine ஆகியோரது கருத்துகளுடன் நிகழ்ச்சி படைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
Share




