சென்னையில் மோசமான வறட்சி ஏற்பட்டுள்ளதாகவும் அதிகரித்துக்கொண்டே செல்லும் தண்ணீர் தட்டுப்பாட்டினால் பலர் இரவு முழுக்க வெற்றுக் குடங்களோடு தெருவில் காத்துக் கிடப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் நிலவுவதாக கூறப்படும் பின்னணியில் நிலமை கட்டுக்குள் இருப்பதாக அரசு தரப்பில் கூறப்பட்டாலும் எதிர்கட்சிகள் அதனை நிராகரிக்கின்றன. இதுதொடர்பில் ExNoRa என்ற அமைப்பின் நிறுவனரும் சர்வதேச ரீதியில் செயற்படும் சமூக மற்றும் சுற்றுப்புறச் சூழல் செயற்பாட்டாளருமான முனைவர் M.B.நிர்மல் மற்றும் மழைவள மாற்றம் குறித்த ஆய்வில் ஈடுபட்டிருக்கும் புவி ஆய்வு விஞ்ஞானி மோர்தெகாய் ஆகியோருடைய கருத்துக்களுடன் விவரணம் ஒன்றை முன்வைக்கிறார் றேனுகா.
Share





