குடியுரிமை சட்டங்கள் மாற்றப்படுவது குறித்து முன்மொழியப்பட்ட மாற்றங்கள் தமக்குக் கவலை தருவதாகப் பல்வேறு இனக் குழுக்கள் குரல் கொடுத்துள்ளன. ஆஸ்திரேலியாவிற்குப் புதிதாகக் குடியேறுபவர்களுடைய வாய்ப்புகளை, இந்த சட்ட மாற்றங்கள் குறைக்கும் என்றும், மேலும் ஆஸ்திரேலியாவில் தற்போதுள்ள சமூகங்களை அது தனிமைப்படுத்தலாம் என்றும் அவர்கள் அஞ்சுகின்றனர். அரசாங்கத்தால் பரிசீலிக்கப்படும் புதிய மாற்றங்களில், கடினமான ஆங்கில மொழித் தேர்வு மற்றும் நிரந்தர வதிவிட காலத்தை அதிகரித்தல் ஆகியவையும் அடங்கும். இது குறித்து Andrea Nierhoff மற்றும் Marija Zivic எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார், குலசேகரம் சஞ்சயன்.