சமீபத்திய தரவுகளின்படி, கடந்த மாதம் (2022ஆம் ஆண்டு டிசம்பர்) முடிவடைந்த காலாண்டில், நுகர்வோர் விலைக் குறியீடு (CPI) 1.9 சதவீதமாக, அல்லது ஒரு ஆண்டில் 7.8 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று நாட்டின் புள்ளியியல் துறை அறிவித்துள்ளது.
இந்தப் போக்குத் தொடருமா என்பது குறித்தும், இதனால் எமக்கு எப்படியான தாக்கம் இருக்கும் என்பது குறித்தும் பதிலளிக்கிறார் பெர்த் நகரில் வாழும் கோவிந்தராஜன் அப்பு அவர்கள். பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்பம் குறித்து கட்டுரை எழுதும் அவர், ஆஸ்திரேலியாவின் CPA, CA மற்றும் AIM உயர்க்கல்வி நிறுவனங்களில் உறுப்பினராக இருப்பதோடு பல ஆண்டுகளாக அரசு நிறுவனத்தில் பணியாற்றி வரும் கோவிந்தராஜன் அப்பு அவர்களோடு உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.





