புகலிடம் கோரி வந்து, நவூரு மற்றும் மானுஸ் தீவுகளில் தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருப்பவர்களின் நிலைமை என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை. இந்த வருடம் அக்டோபர் மாத இறுதிக்குள் மானுஸ் தீவு தடுப்பு முகாம் மூடப்படவுள்ளது. அமெரிக்காவுடன் ஆஸ்திரேலியா ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்தியிருந்தாலும், சிலருக்கு அனுமதி மறுக்கப்படலாம் என்று செய்திகள் வந்துள்ளன. விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்பிலிருந்த தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு அமெரிக்கா செல்ல அனுமதி மறுக்கப்படலாம் என்று செய்திகள் கசிந்துள்ளன. இது குறித்து Greg Dyett மற்றும் Marija Zivic எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.