தற்கொலைகளைத் தடுக்கும் நோக்கிலும் இதுகுறித்த விழிப்புணர்வையூட்டும் நோக்கிலும், ஆண்டுதோறும் செப்டம்பர் 10ம் திகதி உலக தற்கொலை தடுப்பு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நிலையில் தற்கொலை சம்பவங்கள் நமது சமூகத்தில் அதிகரித்திருப்பதற்கான காரணங்கள் தொடர்பிலும் இதற்கு எப்படி எங்கே உதவிபெறலாம் என்பது தொடர்பிலும் உளவியலாளரான கௌரிஹரன் தனபாலசிங்கம் அவர்களுடன் உரையாடுவோம். மெல்பனில் வாழும் கௌரிஹரன் அவர்கள் 15 வருடங்களுக்கும் மேலாக உளவியலாளராக பணியற்றிவரும் அதேநேரம் பூர்வீக குடி பின்னணிகொண்டவர்கள் மற்றும் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் உட்பட பல்வேறு தரப்பினருடன் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share




