தமிழ்நாட்டில் இந்திய மக்களவைக்கான தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் பெரும் வெற்றிபெற இயலாவிடினும், முக்கிய தாக்கத்தை மூன்று சிறு கட்சிகள் ஏற்படுத்தக் கூடும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இந்த சிறு கட்சிகள் குறித்த விவரணம். அம்மா மக்கள் முனேற்றக் கழகம் சார்பில் CR சரஸ்வதி அவர்களும், மக்கள் நீதி மையத்தின் சார்பில் திருவலூர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் M. அருணாசலம் அவர்களும் நாம் தமிழர் கட்சியின் வடசென்னை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் காளியம்மா அவர்களும், அரசியல் ஆய்வாளர் பேராசிரியர் கிருஷ்ணா ஆனந்த் தங்களது கருத்துக்களை முன்வைக்கின்றனர். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.
Share




