புகலிடம் கோரி, ஆஸ்திரேலியாவிற்கு வந்து தன் துணையைத் தேடிக்கொண்டு, இரண்டு பெண்குழந்தைகளுக்குப் பெற்றோரான நடேசலிங்கம், பிரியா தம்பதியினர் மட்டுமல்ல அவர்களது குடும்பத்தையும் நாடுகடத்தப் போவதாக குடிவரவுத்துறை சொல்கிறது. ஆனால், அதனைத் தடுக்க வேண்டும் என்று பலர் குரல் கொடுக்கிறார்கள். என்ன நடந்தது, இனி என்ன நடக்கலாம்? இந்தக் குடும்ப நண்பர் ஒருவர் மற்றும் அகதிகளுக்காகக் குரல் கொடுப்பவரின் பார்வை, உள்துறை அமைச்சர் எமக்களித்த பதில், மற்றும் இந்தக் குடும்பம் வாழ்ந்த இடத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோரின் கருத்துகளுடன் நிகழ்ச்சி படைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
19 மார்ச் நிகழ்ச்சி - "நாடு கடத்தப்பட இருந்தவர்களுக்கு என்ன நடக்கிறது?"
Share





