SKIP TO MAIN CONTENT

000 அழைப்பு எங்கிருந்து வருகிறது என்பதை துல்லியமாக கண்டறியும் புதிய தொழில்நுட்பம்!

ஆஸ்திரேலியாவிலுள்ள ஒருவர் அவசரநிலையின்போது தனது கைபேசியிலிருந்து 000 இலக்கத்தை அழைத்தால் அவர் எங்கிருந்து அந்த அழைப்பினை மேற்கொள்கிறார் என்பதை துல்லியமாக தெரியப்படுத்தும் தொழில்நுட்பம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

NSW State Emerge Service
Source: AAP

2 min read

Published

Updated

By Renuka


Skip to article content

Highlights

  • 000 அழைப்பு எங்கிருந்து மேற்கொள்ளப்படுகிறது என்பதை கண்டறியும் புதிய தொழில்நுட்பம் ஆஸ்திரேலியாவில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
  • மே 12 முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ள இந்த தொழில்நுட்பம் GPS, WiFi மற்றும் Mobile network உள்ளிட்டவற்றின் உதவியுடன் அழைப்பை மேற்கொள்பவரின் இடத்தை துல்லியமாக கண்டுபிடிக்கும்.
  • 000 எண்ணுக்கு அழைப்புவரும்பாது இத்தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்ளத் தகுதியான கைபேசிகளில் இது தானாகவே செயல்படுத்தப்படும்.

Advanced Mobile Location (AML) என்ற தொழில்நுட்பத்தின் உதவியுடன், அவசர சேவைப்பிரிவில் பணியாற்றுபவர் தன்னுடன் பேசிக்கொண்டிருக்கும் நபர் எந்த முகவரியில் அல்லது எந்த இடத்தில் இருக்கிறார் என்பதை துல்லியமாகக் கண்டறிய முடியும் என குறிப்பிடப்படுகிறது.

ஆபத்தில் இருக்கும் ஒருவர் தான் எந்த இடத்தில் இருக்கிறார் என்பதை தெளிவாக குறிப்பிட முடியாத சந்தர்ப்பங்களில் இத்தொழில்நுட்பம் மிக உதவியாக இருக்கும் என குறிப்பிடப்படுகிறது.

கடந்த ஆண்டு இறுதியிலிருந்து பரீட்சிக்கப்பட்டுவந்த இத்தொழில்நுட்பம் மே 12ம் திகதியிலிருந்து பயன்பாட்டுக்கு வந்துள்ளதாக Emergency Services Telecommunications Authority தெரிவித்துள்ளது.

அவசர அழைப்பினை மேற்கொள்ளும் நபரின் கைபேசி குறித்த தொழில்நுட்பத்தை உள்வாங்குவதற்கு ஏற்றதாக இருக்கும்பட்சத்தில் அந்நபர் எந்த இடத்தில் இருக்கிறார் என்பதை ஐந்து முதல் ஐம்பது மீட்டர் தூர இடைவெளியில் காண்பிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

இத்தொழில்நுட்பம் ஒருவர் 000 எண்ணை அழைக்கும்போது தானாகவே செயற்பட ஆரம்பிக்கும் எனவும் GPS, wi-fi, mobile network போன்றவற்றை அடிப்படையாக வைத்து அந்நபர் இருக்கும் இடத்தைக் காண்பிக்கும் எனவும் குறிப்பிடப்படுகிறது.

முன்னைய காலங்களில் பூங்காக்கள், கடற்கரைகள், பண்ணைகள் போன்றவற்றிலிருந்து அவசர அழைப்பு மேற்கொண்டவர்களை சென்றடைய நீண்டநேரம் எடுத்திருந்த பின்னணியில் இப்புதிய தொழில்நுட்பத்தின் உதவியுடன் தேவையிலிருப்பவர்களை வேகமாக சென்றடைய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவிமையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now