விக்டோரியாவில் மிக ஆபத்தான புதியவகை கொரோனா வைரஸ் பரவல்!

விக்டோரியாவில் சமூகப் பரவல் ஊடாக தொற்றுக்கண்டோர் எண்ணிக்கை 64 ஆக அதிகரித்துள்ளது.

Melbourne lockdown, COVID-19

Evden çalışabilecek Melbourneluların yine evden çalışması isteniyor. Source: (AAP Image/Erik Anderson

Highlights
  • இந்தியாவில் இனங்காணப்பட்ட மிக ஆபத்தான திரிபடைந்த புதியவகை வைரஸ் முதற்தடவையாக ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • விக்டோரியாவில் சமூகப் பரவல் ஊடாக புதிதாக நால்வருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
  • மெல்பன் பெருநகரப்பகுதி முழுவதும் முடக்கநிலை மேலதிகமாக ஒரு வாரத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.
விக்டோரியாவில் சமூகப் பரவல் ஊடாக புதிதாக நால்வருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள அதேநேரம் மிக ஆபத்தான புதியவகை திரிபடைந்த கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.

சில தினங்களுக்கு முன்பு தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மெல்பன் மேற்கைச் சேர்ந்த குடும்பத்தினரிலேயே இப்புதியவகை வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும், ஏற்கனவே ஏற்பட்டுள்ள பரவலிலிருந்தோ அல்லது தனிமைப்படுத்தல் விடுதிகளிலோ இந்தவகை வைரஸ் இனங்காணப்படவில்லை எனவும் இவர்களுக்கு எவ்வாறு இத்தொற்று ஏற்பட்டது என்பதும் இதுவரை தெரியவரவில்லை எனவும் விக்டோரிய தலைமை மருத்துவ அதிகாரி Brett Sutton  தெரிவித்தார்.

குறித்த குடும்பம் விடுமுறைக்காக நியூசவுத் மாநிலத்தின் Jervis Bay பகுதிக்குச் சென்றிருந்தது.
முதன்முதலாக இந்தியாவில் இனங்காணப்பட்ட மிக ஆபத்தான Delta என பெயரிடப்பட்ட திரிபடைந்த வைரஸ் இப்போது முதற்தடவையாக  ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் Brett Sutton  தெரிவித்தார்.

இதேவேளை இன்றையதினம் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நால்வரில் மூவருக்கும் இந்தக் குடும்பத்திற்கும் தொடர்பு இருப்பதாகவும் மற்றைய நபர் ஏற்கனவே தொற்று உறுதிப்படுத்தப்படவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சுமார் 49 ஆயிரம் பேருக்கு மேற்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் 4 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதையடுத்து விக்டோரியாவில் ஏற்பட்டுள்ள கோவிட் பரவல் காரணமாக தொற்றுக்கண்டோர் எண்ணிக்கை 64 ஆக அதிகரித்துள்ளது.

தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
இந்நிலையில் கோவிட் பரவலைக் கட்டுப்படுத்தவென நடைமுறைப்படுத்தப்பட்ட முடக்கநிலை Regional விக்டோரியாவில் தளர்த்தப்பட்டுள்ள அதேநேரம் மெல்பன் பெருநகரம் முழுவதும் முடக்கநிலை மேலும் ஒரு வாரத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி மெல்பனில் வாழ்பவர்கள் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு, தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு, மருத்துவ பராமரிப்பு பெற மற்றும் பராமரிப்பு வழங்க, உடற்பயிற்சி மற்றும் வேலை(அனுமதி வழங்கப்பட்டவர்கள் மட்டும்) ஆகிய ஐந்து காரணங்களுக்காக மட்டுமே வீடுகளை விட்டு வெளியேற முடியும்.

Shopping மற்றும் உடற்பயிற்சி போன்றவற்றுக்காக மக்கள் தமது வீடுகளிலிருந்து 10 கிலோமீட்டர்களுக்கு உட்பட்ட இடங்களுக்கு மட்டுமே பயணம் செய்ய முடியும். 

அதேநேரம் Regional விக்டோரியாவில் வாழ்பவர்கள் 

  • வீடுகளைவிட்டு வெளியே செல்வதற்கு காரணம் தேவையில்லை.
  • அனுமதிக்கப்பட்ட காரணங்களுக்காக மட்டுமே மெல்பனுக்கு பயணம் செய்ய முடியும்.
  • வெளியிடங்களில் 10 பேர் வரை ஒன்றுகூடலாம்.
  • கொரோனா கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு வர்த்தக  நடவடிக்கைகள் மற்றும் சேவைகள் இயங்க ஆரம்பிக்கலாம்.
விக்டோரியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தொடர்பில் dhhs.vic.gov.au இணையத்தளத்தில் மேலதிகமாக அறிந்துகொள்ளலாம்.

இதுஒருபுறமிருக்க தொற்றுக் கண்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்துவருவதால் அவர்கள் சென்றுவந்த இடங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது. 

அந்த இடங்களின் விவரங்களை தமது இணையத்தில் வெளியிட்டுள்ள விக்டோரிய சுகாதாரத்துறையினர் குறிப்பிட்ட நேரங்களில் குறித்த இடங்களில் இருந்தவர்கள் உடனடியாக தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகும் அதேநேரம் கோவிட் சோதனையை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனாவைரஸ்உதவிமையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

 


Share

Published

By Renuka

Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand