காலநிலை மாற்றத்திற்கு நாம் அதிக பங்களிக்கிறோம் என்பதால், மார்ச் மாதம் கடைசி சனிக்கிழமை இரவு, ஒரு மணி நேரத்திற்கு நாம் பயன்படுத்தும் மின்சார சாதனங்கள், மின் விளக்குகள் அனைத்தையும் அணைத்து வைத்து, காலநிலை மாற்றத்தைத் தடுக்கவும், பல்லுயிர்களைப் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தேவையை மக்கள் உணரவைக்க ஊக்குவிக்கும் முயற்சி தான் புவி மணி.
இந்த வருடம் புவி மணி, மார்ச் 24, 8:30 மணியிலிருந்து 9:30 மணிவரை.
கரியமில உமிழ்வு (carbon emission) கடுமையாகக் குறைக்கப்படாவிட்டால் ஆஸ்திரேலியாவின் பறவை மற்றும் ஊர்வன இனங்களில் பாதி, நமது அடுத்த தலைமுறையுடன் அழிந்துவிடும் என்றும்; மூன்றில் இரண்டு பங்கு பாலூட்டிகள், கிட்டத்தட்ட 80 சதவீதமான நீரிலும் நிலத்திலும் வாழக்கூடியவை மற்றும் 60 சதவீத தாவரங்கள் மறைந்துவிடும் ஆபத்து உள்ளது என்று புவி மணி முயற்சியை முன்னெடுத்த WWF கூறுகிறது.
இது குறித்து நாம் 2016ம் ஆண்டு ஒலிபரப்பிய காலத்துளி நிகழ்ச்சி: (கீழே உள்ள படத்தில் சொடுக்குங்கள்)
