ரிஃபாத் ஷாரூக் தமிழகத்தைச் சேர்ந்த 18 வயது இளைஞர். உலகின் மிகச்சிறிய செயற்கைக்கோளை வடிவமைத்து சாதித்திருக்கும் குழுவின் முக்கிய விஞ்ஞானி. அறிவியல் திறன் குறித்து அமெரிக்காவின் நாசா விண்வெளி மைய ஆராய்ச்சியாளர்களால் பாராட்டப்பட்டவர்.கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியைச் சேர்ந்த ரிஃபாத் சமீபத்தில் நடந்து முடிந்த பிளஸ் 2 தேர்வில் 750 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றுள்ளார். அறிவுத் திறமைக்கும், பள்ளி தேர்வுகளில் பெறும் மதிப்பெண்களுக்கும் எந்த தொடர்பும் கிடையாது என்று நிருபித்துள்ளார் இந்த இளம் விஞ்ஞானி. அவரோடு ஒரு சந்திப்பு. சந்தித்து உரையாடியவர்: றைசெல்.