புதுக்கவிதை உலகின் பிதாமகன்களில் தலையாயவர் கவியரசர் நா. காமராசன். இன்றைய புதுக் கவிதை வடிவத்தின் நவீன சிற்பி. திரைப்படபாடல்கள் எனும் பரந்த வெளியில் அவர் பெரும் புகழ் பெற்றாலும், அவரின் இலக்கிய வீச்சுக்கும், வசீகர, கவித்துவ வார்த்தைகளுக்கும் ஈடு இணையில்லை. இவ்வாரம் நம்மை விட்டு மறைந்த கவியரசர் நா. காமராசன் எனும் மாபெரும் கவிஞன் குறித்த தமது நினைவை பகிர்ந்துகொள்கிறார், காமராசனின் நண்பரும் கவிஞருமான மு.மேத்தா அவர்கள்.