"அங்கீகாரம் என்பது நம்மை இயக்கக்கூடிய விசை அல்ல"-பாவண்ணன்

Source: Pavannan
பாவண்ணன் ஒரு குறிப்பிடத்தக்க தமிழ் எழுத்தாளர். 1980களில் எழுதவந்த சிறுகதை எழுத்தாளத் தலைமுறையைச் சேர்ந்தவர். இவரது 35 ஆண்டு கால எழுத்துப் பயணத்தில் 20 சிறுகதைத் தொகுதிகள், மூன்று நாவல்கள், இரண்டு குறுநாவல்கள், 18 கட்டுரைத் தொகுப்புகள் என 50-க்கும் மேற்பட்ட நூல்கள் வெளியாகியுள்ளன. கடந்த இருபதாண்டுகளுக்கும் மேலாக, கன்னட மொழியிலிருந்து பல முக்கியமான ஆளுமைகளைத் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில் சிறுகதை, நாவல், கவிதை, சுயசரிதைகள் என ஏராளமான படைப்புகளை மொழிபெயர்த்தளித்துள்ளார். சாகித்திய அகாதெமியின் சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான விருது உட்பட பல விருதுகளுக்குச் சொந்தக்காரரான எழுத்தாளர் பாவண்ணனுடன் ஒரு சந்திப்பு.
Share



