யாரும் கோயில் அர்ச்சகராகலாம் !!

Gnani (top left), Arulmozhi (bottom left), Yedhu Krishna (middle), Rahul Easwar (centre right)

Gnani (top left), Arulmozhi (bottom left), Yedhu Krishna (middle), Rahul Easwar (centre right) Source: SBS Tamil

கேரள அரசின் கட்டுப்பாட்டுக்குள்ளுள்ள கோயில்களில் தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்டோரை அர்ச்சகர் பணியில் அமர்த்த 32 சதவீதம் வரை இடஒதுக்கீடு அளிப்பது என கேரள அரசு முடிவு செய்துள்ளது. அதனடிப்படையில் பிராமணரல்லாத யாது கிருஷ்ணா என்பவர் அர்ச்சகராக பொறுப்பேற்றிருக்கிறார். இந்தப் பின்னணியில், இது குறித்து, சபரிமலை தேவஸ்தானத்தின் தந்த்ரி எனப்படும் பிரதான சமயக் குருவின் பேரன் ராகுல் ஈஸ்வர் அவர்களிடமும் தமிழ் எழுத்தாளர், நாடகக் கலைஞர், அரசியல் விமர்சகர், கட்டுரையாளர், அரசியல்வாதி என்று பன்முகத் திறனுள்ள ஞானி என்று அறியப்படும் ஞானி சங்கரன் அவர்களிடமும் திராவிடர் கழக பிரசார செயலாளர், வழக்கறிஞர் அருள்மொழி அவர்களிடமும் தமிழ் நாட்டில் இது குறித்த பார்வை என்ன என்பதைக் கேட்டறிந்து கொள்கிறார் குலசேகரம் சஞ்சயன்.


 

 

 


Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now