இலங்கையிலிருந்து சிங்கப்பூருக்குக் குடி பெயர்ந்து, அந்நாட்டில் மட்டுமன்றி, உலகின் பல பாகங்களிலும் பரதநாட்டியக் கலையில் தமக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்திருக்கும் அரவிந்த் குமாரசாமி மற்றும் மோகனப்ரியன் தவராஜா இருவரும் தமது படைப்புகளில் ஒன்றான ‘பரமபதம்' என்ற நாட்டிய நிகழ்ச்சியை நடத்துவதற்காக ஆஸ்திரேலியா வந்துள்ளார்கள்.
சிட்னி நகரில் இந்த வார இறுதியில் நடக்கவிருக்கும் நிகழ்ச்சி குறித்தும், அவர்களது வேறு படைப்புகள் குறித்தும், பரதநாட்டியத்தை இளையோரிடையே பிரபலப்படுத்த அவர்கள் எடுத்துவரும் முயற்சிகள் குறித்தும், குலசேகரம் சஞ்சயனுடன் மன திறந்து பேசுகிறார்கள்.
இரண்டு பாகங்களாகப் பதியப்பட்டுள்ள நேர்காணலின் முதல் பாகம் இது.
நிறைவுப் பாகம்:
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.




