நாட்டின் பொருளாதாரத்தின் மீது COVID-19 தொற்று ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தை சமாளிக்க அரசு அறிமுகப்படுத்தியிருக்கும் JobKeeper திட்டம், பல வணிக நிறுவனங்களுக்கு மீண்டும் ஒரு புத்துணர்ச்சியை வழங்குகிறது. இருந்தாலும், இந்தத் திட்டத்தில் விண்ணப்பித்துள்ள பலருக்கு இதுவரை பணம் கிடைக்கவில்லை என்று முறையிடுகிறார்கள்.
இதே வேளை, புகலிடக் கோரிக்கையாளர்கள் இந்தத் தொற்றினால் ஆபத்துக்குள்ளாகக் கூடும் என்று புகார் செய்யப்பட்டுள்ளது.
இது போன்ற, COVID-19 குறித்து SBS செய்திப் பிரிவின் Brett Mason, Julia Carr-Catzel, Adrian Arciuli, Cassandra Bain, Peggy Giakoumelos, Aaron Fernandes, Abby Dinham, Lin Evlin, மற்றும் Katy Watson ஆகியோர் எழுதிய விவரணங்களின் அடிப்படையில், தமிழில் ஒரு விவரணத்தை வழங்குகிறார் குலசேகரம் சஞ்சயன்.
Share





