அரச மானியங்களிலும் நலன்புரி செயற்பாடுகளிலும் ஆஸ்திரேலியர்கள் தங்கியிருப்பதன் அளவு கடந்த பத்தாண்டுகளில் 40 பில்லியன் டொலர்களால் அதிகரித்துள்ளது என்று, ஆஸ்திரேலியாவில் நல்வாழ்வு பற்றிய சமீபத்திய அறிக்கை கண்டறிந்துள்ளது. இது உள்நாட்டு உற்பத்தியில் 9.5 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலை, இளைய தலைமுறையினர் வீட்டு உரிமையாளர்களாகுவது எட்டாக்கனவாகி வருகிறது என்பதை உறுதிப்படுத்துகிறது. இது குறித்து, Amanda Copp மற்றும் Sarah Abo எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.