தமிழ்நாட்டில் இந்து கடவுள்கள் மற்றும் இந்திய பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்களை அவதூறாக பேசியதாக கன்னியாகுமரியை சேர்ந்த கிறிஸ்தவ மதகுரு ஜார்ஜ் பொன்னைய்யா கைது செய்யப்பட்டுள்ளார். பிற மதத்தினர் குறித்து வெறுப்பை விளைவிக்கும் கருத்துக்களையும் பேசியதாக குற்றம்சாட்டப்பட்ட அவரை தமிழக காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பல்வேறு இந்து அமைப்புகள் அவர் மீது புகார் அளித்துள்ள காரணத்தால் அவர் மீது ஏழு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share




