தற்போதுள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தில் சில மாற்றங்களை கொண்டுவரும் நோக்கில் நாடாளுமன்றத்தில் சட்ட திருத்தம் ஒன்றை அரசு முன்வைத்துள்ளது. இதில் குறிப்பிடப்பட்டுள்ள திருத்தங்களினால் எந்த பலனும் கிடைக்கப் போவதில்லை என எதிரணியினர் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் பயங்கரவாத தடைச்சட்டத்தை முற்றாக நீக்குமாறு கோரிக்கை முன்வைத்து வடக்கு கிழக்கில் கையெழுத்து போராட்டம் ஒன்று இடம்பெற்று வருகின்றது. இதில் அரசியல் பிரமுகர்கள், மத தலைவர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள் எனப்பலரும் கையெழுத்திட்டு வருகின்றார்கள். இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.