செய்தியின் பின்னணி நிகழ்ச்சியில் தொடர்வது, இலங்கையில் கடந்து சென்ற நாட்களில் இடம்பெற்ற முக்கிய செய்திகள்.
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா உயிர் அச்சுறுத்தல் காரணமாக நாட்டைவிட்டு வெளியேறியமைக்கு கண்டனம் தெரிவித்து வடக்கு கிழக்கில் தொடரும் போராட்டம், இலங்கையில் இடம்பெற்ற எந்த விஷயத்திற்கும் சர்வதேச விசாரணை கிடையாது என அதிபர் ரணில் விக்கிரமசிங்க அறிவிப்பு மற்றும் சில தினங்களுக்குள் தீர்வு வழங்காவிட்டால் வீதி மறிப்பு போராட்டம் செய்வோம் சாகும் வரையில் உண்ணாவிரத போராட்டம் நடத்துவோம் என மட்டக்களப்பு கால்நடை பண்ணையாளர்கள் எச்சரிக்கை போன்ற செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.





