முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெறும் முல்லைத்தீவு மாவட்ட முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள நினைவு முற்றத்தில் இருந்த நினைவுத்தூபி சேதமாக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அங்கே நடுவதற்காக கொண்டு வரப்பட்டிருந்த பாரிய பொது நினைவுக்கல்லும் இரவோடு இரவாக காணாமலாக்கப்பட்டுள்ளது. இந்த செயற்பாட்டிற்கு பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார்கள்.
இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாககேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ளஎமது tune in பக்கத்திற்குச்செல்லுங்கள்.டிஜிட்டல்வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத்தேடுங்கள்.




