இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி, சட்டவிரோதமான மீன்பிடி முறைகளை பயன்படுத்தி இந்திய மீனவர்கள் தொழிலில் ஈடுபடுவதாகவும் அதனால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் வட பகுதி மீனவர்கள் குற்றஞ்சாட்டி வருகிறார்கள். இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் பொருட்டு ஏற்கனவே பல்வேறு கட்ட பேச்சுக்கள் இடம்பெற்ற போதிலும் தீர்வுகள் கிடைக்கவில்லை.
நேற்று முன்தினம் ஆரம்பமான கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவின் போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் மீண்டுமொரு இலங்கை இந்திய மீனவர்கள் பேச்சுவார்த்தை இடம்பெற்று போதிலும் தீர்வுகள் ஏதுமின்றி முடிவடைந்துள்ளது. இதுபற்றிய கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
——————————————————————————————————————————
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.





