இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமை பல்வேறு துறைகளில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தி வருகிறது. கல்வி, அபிவிருத்தி, மருத்துவம், என பல்வேறு துறைகளில் இதன் தாக்கத்தை அவதானிக்க முடிகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆறு பேரில் ஒருவருக்கு புற்றுநோய் தாக்கம் காணப்படுவதாக தரவுகள் தெரிவிக்கின்றன. அது மாத்திரமல்லாது இலங்கையில் இறப்பதற்கான காரணங்களில் முதன்மையானதாக புற்றுநோய் காணப்படும் சூழல் ஏற்படும் எனவும் எதிர்வு கூறப்படுகின்றது. பொருளாதார நெருக்கடியினால் ஏற்பட்டுள்ள நிலைமை இதனை மேலும் விரைவுபடுத்தி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் பேதியளவு விழிப்புணர்வு முக்கியமானது என வைத்தியர்களினால் வலியுறுத்தப்படுகின்றது. இதுபற்றிய கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in