கச்சதீவில் இதுவரை காலமும் அந்தோனியார் ஆலயம் மட்டுமே இருந்தது. இந்த நிலையில், அங்கு தற்போது புத்தர் சிலை அமைக்கப்பட்டுள்ளதாகவும் அரசமரமும் நடப்பட்டுள்ளதாகவும் கச்சதீவு பங்குத்தந்தை தெரிவித்துள்ளார். தற்போது இந்தவிடயம் பல்வேறு சர்ச்சைகளுக்குட்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கு பகுதிகளில் பெளத்தமயமாக்கல் இடம்பெற்று வருவதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தமிழ் அரசியல்வாதிகளால் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் கச்சதீவு புத்தர் சிலை விவகாரம் பல்வேறு கண்டனங்களுக்குட்பட்டுள்ளது. இதுபற்றிய கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.