இலங்கையில் சீனாவினால் உருவாக்கப்பட்டுவரும் செயற்கைத் தீவான கொழும்பு துறைமுக நகர பொருளாதார அபிவிருத்தி ஆணைக்குழு சட்டமூலம், இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. எதிரணியின் கடும் எதிர்புகளுக்கு மத்தியில் இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த கொழும்பு துறைமுக நகரம் தொடர்பில் பல்வேறு கருத்துக்களையும், அரசு மீது பலதரப்பட்ட விமர்சனங்களையும் எதிரணிகள் தொடர்ந்து முன் வைத்து வருகின்றன.
இவை குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.




