இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
இலங்கை அதிபர் உள்ளிட்ட ஆளும் தரப்பின் முக்கிய உறுப்பினர்களையும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ் தலைவர்களையும் சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். 13வது அரசியலமைப்பின் ஊடான அதிகாரப்பகிர்வின் மூலம் தமிழர் பிரச்சினைக்கான தீர்வினை அர்த்தமுள்ளதாக்குமாறு அவர் இலங்கை அரசிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார். இது குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
Share




