வடமாகாணத்தின் பிரதம செயலாளராக பெரும்பான்மை இனத்தை சேர்ந்த ஒருவரை அதிபர் கோட்டாபய ராஜபக்ஸ நியமித்துள்ளார். இதற்கு தமிழ்த்தரப்பிலிருந்து கண்டனம் எழுந்துள்ளதுடன், தமிழ் பேசும் மக்கள் அதிகமாக வாழும் வடமாகாணத்திற்கு தமிழ் பேசக்கூடிய, தமிழ் மொழியில் பணியாற்றக்கூடிய ஒருவரை நியமிக்குமாறு தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் கோரிக்கை முன்வைத்துள்ளார்கள். அத்தோடு, வடமாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் மற்றும் உறுப்பினர்கள் இணைத்து வடமாகாண பிரதம செயலாளர் நியமனத்தில் மாற்றம் செய்யுமாறு கோரிக்கை மனுவொன்றையும் அதிபருக்கு அனுப்பியுள்ளார்கள். இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்
Share




