சமையல் எரிவாயு கசிவினால் நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக பல்வேறு வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகி வருகின்றன. ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளார்கள்.
இந்த நிலையில் இதற்கு காரணம் தெரியாது மக்கள் அச்சத்திலுள்ள நிலையில் எதிர்க்கட்சியினர் இது தொடர்பில் அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகிறார்கள். இவ்வாறான நிலையில், சமையல் எரிவாயு கொள்கலன்களில் தீப்பற்றுதல், வெடித்தல் தொடர்பான விசாரணை மற்றும் தீர்வுகளை ஆராய்வதற்கு இலங்கை அதிபரினால் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.





